
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுடைய பலி எண்ணிக்கையானது தற்போது 57 ஆக அதிகரித்துள்ளது . தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் எதிர்க்கட்சியினர் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முறையான மருந்துகள் இல்லை என்றும் போதிய மருத்துவர்கள் இல்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “ஃபோமிபிசோல் தயாரிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், எந்த மாநிலத்திலும் கையிருப்பு இல்லாத அந்த ஊசியை, ஒரு ஊசி ரூ.6,700 க்கு மும்பையில் இருந்து வாங்கி சேலம், கள்ளக்குறிச்சி, சென்னையில் வைத்துள்ளோம். பொய் சொல்லி மக்களை அச்சுறுத்தும் இபிஎஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என மா.சு கூறினார்.