
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் வீழ்ச்சியை கண்டுள்ள நிலையில், எரிபொருள் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மத்திய அரசு கலால் வரியை அதிரடியாக உயர்த்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான ரூபாய் 2 கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக் கொள்ளும் எனவும், விற்பனை விலையில் மாற்றம் இருக்காது எனவும் பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.