
தென்மேற்கு வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்க ஆரம்பித்தது இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை செய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி தொடர்பான வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது வரை செம்பரம்பாக்கம் ஏரியில் 67 சதவீதம் மட்டுமே நீர் நிரம்பியுள்ளது. எரிக்கான தண்ணீர் வரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பதாகவும் அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.