
தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, இலங்கை கடலோர பகுதிகளை அடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டிசம்பர் 17-ஆம் தேதி தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் நாளை மறுநாள் டிசம்பர் 18-ஆம் தேதி வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. மேலும் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.