தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சமீப காலமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் அதன்படி தென்காசி, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.