
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் நேரடி பணம் பரிமாற்றம் குறைந்து தற்போது மொபைல் மூலமாக அதனை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் மோசடிகளும் நடைபெறுகிறது. எளிதாக போன் நம்பரை வைத்து தகவல்களை திருடுவது மற்றும் பணத்தை கொள்ளையடிப்பது போன்ற குற்றச்செய்திகள் நடைபெறுகின்றன.
குறிப்பாக ஓடிபி மூலமாக, வங்கி கணக்கில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை திருடி வங்கி கணக்கில் பணத்தை திருடி விடுகின்றனர். அது மட்டுமல்லாமல் மோசரியான போன் கால் மூலமும் ஆன்லைன் மோசடி நடைபெறுகிறது. இது போன்ற மோசடிகளில் ஈடுபடும் செல்போன் எண்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்காக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய பிரத்தியேக செயலியை உருவாக்கியுள்ளது. மோசடியில் ஈடுபடுத்தப்படும் செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் பதிவேற்றம் செய்யலாம். அதனை ஆய்வு செய்து நிரூபணம் செய்யப்பட்டால் அந்த மொபைல் எண் முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.