
ஒரு நிதியாண்டு என்பது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி அடுத்த வருடம் மார்ச் 31ஆம் தேதியோடு முடிகிறது. இதனை கருத்தில் கொண்டு தான் புதிய வரிகள், விதிகள், பட்ஜெட் என அனைத்தும் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் அமல்படுத்த போகும் புதிய விதிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
பயன்படுத்தப்படாத செல்போன் எண்களுக்கான UPI பரிவர்த்தனைகள் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. நிலையான வைப்புத்தொகை , தொடர்வைப்பு திட்டம் மற்றும் பிற சேமிப்பு திட்டங்களில் இருந்து பெறப்படும் வட்டி வருமானத்தின் வரி விலக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது நிதிச்சுமையை குறைத்து, முதலீட்டாளர்களுக்கு பயன் கொடுக்கிறது. நிலையான வைப்பு திட்டங்கள் மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கான திருத்தப்பட்ட வட்டி விகிதமானது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது.அடுத்ததாக இதுவரை பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்காதவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. ஏப்ரல் 1 முதல் டிமேட் மற்றும் மியூச்சுவல் FUNDகளுக்கான கடுமையான KYC சரிபார்ப்பு விதிகள் அமலாக உள்ளது.