
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் நிலையில் இது தமிழகம் நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக நேற்று முதலே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பிற்பகல் ஒரு மணி வரையில் தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சேலம், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, செங்கல்பட்டு ஆகிய 35 மாவட்டங்களின் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இன்று பிற்பகல் ஒரு மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.