
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். இன்று, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நாளையும் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நேற்று திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. கோவை ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம், காந்திபுரம், உக்கடம், சிவானந்தா காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.