கேரள மாநிலம் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சந்தியா. இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய கல்யாணி என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற அன்று சந்தியா அங்கன்வாடியில் இருந்து தனது மகளை அழைத்துச் சென்று ஆற்றில் வீசி கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் சந்தியாவை பிடித்து விசாரித்த போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் கொலை செய்யப்பட்ட கல்யாணிக்கு தந்தை வழி உறவினர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

அவரது செல்போனிலும் ஆபாச புகைப்படம் இருந்துள்ளது. அவருக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.