
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் மேல்முறையீடு செய்த 1.48 லட்சம் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த பத்து மாதங்களாக வழங்கப்படாத தொகை கிடைக்குமா என்று பெண்கள் கேள்வி எழுப்பும் நிலையில் தமிழக அரசின் நிதி சுமை காரணமாக அரியர் தொகை கிடைக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.