
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ்(44)- ரம்யா(37) தம்பதியினர். சந்தோஷ் சொந்தமாக வணிக நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவரது மனைவி ரம்யா குடும்பத் தலைவி. இவர்களுக்கு மொத்தமாக 10 குழந்தைகள் இருக்கின்றனர் அவர்களில் 9 குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள்.
மொத்தமாக உள்ள 10 குழந்தைகளில் 8 பெண் பிள்ளைகளும், 2 ஆண் பிள்ளைகளும் உள்ளனர். முதலாவதாக பிறந்த பெண் அல்பியா 12-ஆம் வகுப்பு படிக்கிறார். இரண்டாவதாக உள்ள பெண் ஆக்னஸ் இவர் 10-ம் வகுப்பு படிக்கிறார். மூன்றாவதாக உள்ள பெண் கிளேர் 8-ம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் மூவரும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர்.
நான்காவது மகள் அசின் தெரஸ் 6-ம் வகுப்பும், ஐந்தாவது மகன் லியோ டாம் 4-ம் வகுப்பும் படிக்கின்றனர் .ஆறாவது குழந்தை லிவின்ஸ் அந்தோணி 2-ம் வகுப்பும் ஏழாவது குழந்தை கேத்ரின் யு.கே.ஜி யும் படிக்கின்றனர். எட்டு மற்றும் ஒன்பதாவதாக பிறந்த குழந்தைகள் இருவரும் ரெட்டை குழந்தைகள்.
ஜியோ வானமரியா, கியானா ஜோசபினா இருவரும் அங்கன்வாடி மையத்திற்கு செல்கின்றனர். பத்தாவது குழந்தை 3மாத கைக்குழந்தை. குழந்தைகள் வளர்ப்பது பற்றி தம்பதியினரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது, இருவரும் குழந்தைகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். எனவே இவர்கள் வரிசையாக குழந்தை பெற்ற படியே இருந்திருக்கிறார்கள்.
குழந்தைகளை கவனிப்பதற்காகவே அஞ்சிதா என்ற பெண் பணியாளர் உள்ளார். இதனால் 10 குழந்தைகளை வளர்ப்பதற்கு எங்களுக்கு சிரமமாக இல்லை என கூறினர். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது அவர்களுக்கு உணவு தயாரிப்பது முதல் அவர்களை தயார் செய்வது வரை பணிப்பெண்ணும் குழந்தைகளின் பாட்டியும் சேர்த்து கவனித்துக் கொள்கின்றனர்.
இதனால் சந்தோஷிற்கும் ரம்யாவிற்கும் குழந்தைகளை நினைத்து பெரிய கவலை ஒன்றும் இருந்ததே இல்லை. ரம்யாவிற்கு முதல் மூன்று பிரசவங்களும் சுகப்பிரசவமாகவும் அதன் பிறகு பிறந்த மற்ற எல்லா குழந்தைகளும் சிசேரியன் மூலமாகவே பிறந்தது. ஒன்பது குழந்தைகளும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் பள்ளிக்கு செல்வதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உங்களுக்கு இத்தனை பிள்ளைகளா? என ரம்யாவிடம் கேள்வி கேட்கின்றனர்.
அதற்கு ரம்யா அவர்களிடம் ஒன்பது பிள்ளாலும் கடவுள் தந்த பரிசு கடவுளின் பரிசுகளை நிராகரிப்பது பாவம் எங்கள் பிள்ளைகள் வளர வளர எங்கள் வியாபாரமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது என சிரித்துக் கொண்டே கூறுவார். ஒன்பது பிள்ளைகளும் ஒன்றாக பள்ளிக்கு செல்வதை பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறினர்.