ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையும் இல்லாது இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல. வாழ்வாதாரத்திற்கு எந்த அனுகூலமும் கிடைக்காமல் ஆதரவற்ற நிலையில் இருப்பது என்று பொருள். எனவே புதிய அறிவுரையின்படி சான்றிதழ் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் சார்நிலை அலுவலர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.