பொதுவாக திருமணத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் பலவிதமான கனவுகள் இருக்கும். அதிலும் சிலர் தங்களுடைய திருமணத்தை யாரும் நடக்காத வகையில் மிகவும் வித்தியாசமாக நடத்த விரும்புவார்கள். அந்த வகையில் ஒரு தம்பதி தங்களுடைய திருமணத்தை பனி சிகரத்தில் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளனர்.

அதன்படி சுவிட்சர்லாந்தில் உள்ள ஸ்னோ அல்பைன் சிகரங்களில் பிரம்மாண்ட திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் 2222 மீட்டர் உயரத்தில் நடைபெற்ற நிலையில், திருமணத்தின் போது ஐஸ் கியூபில் இருந்து மணமகள் மற்றும் மணமகன் வெளிவந்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பலரும் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by LEBANESE WEDDINGS (@lebaneseweddings)