இந்திய ரயில்வே கோல்டன் சேரியாட் என்ற ரயிலை இயக்குகிறது. இந்த ரயிலில் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட ஆடம்பர வசதிகள் உள்ளது. டிசம்பர் 14-ஆம் தேதி இந்த ரயில் செயல்பட தொடங்கும். மார்ச் மாதம் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட தேதிகளில் இயங்கும். இந்த ரயிலில் 13 டபுள் படுக்கை அறைகள், 26 ட்வின் படுக்கை அறைகள், மாற்றுத்திறனாளி விருந்தினர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 40 கேபின்கள் உள்ளது. அங்கு ஒவ்வொரு கேபினிலும் வைபை இணைப்பு, ஏசி, ஸ்மார்ட் டிவிகள், ஆடம்பர குளியலறைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளது. இரண்டு சிக்னேச்சர் உணவகங்கள் பல்வேறு சர்வதேச மற்றும் இந்திய உணவுகளை கொடுக்கிறது.

இந்த கோல்டன் சேரியாட் ரயில் விரிவான சிசிடிவி கண்காணிப்பு, மேம்பட்ட ஃபயர் அலாரம் அமைப்புகள், 24 மணி நேர பாதுகாப்பு பணியாளர்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ரயில் பயணிகளை பெங்களூரு, பந்திப்பூர், மைசூர், ஹலேபிடு, சிக்மகளூர், ஹம்பி, கோவா வழியாக அழைத்துச் செல்கிறது. கோல்டன் சேரியாட் ரயில் டிக்கெட் விலை தோராயமாக 4,5 30 மற்றும் 5% ஜிஎஸ்டியில் தொடங்குகிறது. இந்த கட்டணம் சொகுசு தங்கும் இடம், உணவுகள் பிரிமியர் பானங்கள், வழிகாட்டப்பட்ட சுற்று பயணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆர்வமுள்ள பயணிகள் www.golden chariot.org, [email protected] என்ன மின்னஞ்சல் மூலம் முன்பதிவு செய்யலாம்.