
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெறவிருந்த ஒரு திருமண விழாவில் அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டது. அலங்கரிக்கப்பட்ட திருமண மண்டபம், மேள தாளங்கள், விருந்தினர் கொண்டாட்டம் என அமோகமாகத் தொடங்கிய திருமண விழா, மணமகள் ஒரு முடிவை எடுத்தவுடன், கண்முன்னே சிதைந்தது. அதாவது திருமணத்திற்காக புல்பூர் கோட்வாலி பகுதிக்கு மத்தியப் பிரதேசம் இந்தூரிலிருந்து வந்த மணமகனை மணமகள் நேரில் பார்த்தவுடன், “நீங்கள் என் கணவராக தகுதியற்றவர்” என குறிப்பட்ட.
மணமகள் தரப்பில் இருந்து முன்பு வேறு ஒருவரின் புகைப்படம் காட்டப்பட்டதாகவும், ஆனால் திருமண நாளன்று அதைவிட வயதான மற்றொரு நபர் மணமகனாக வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது ஒரு திட்டமிட்ட ஏமாற்று திருமணமாக இருக்கலாம் என கூறப்பட்டதால், அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மணமகளின் எதிர்ப்பால் திருமண நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதுடன், வழக்கம்போல சடங்குகள் எதுவும் நடைபெறவில்லை. இதையடுத்து, திருமண மண்டபத்திலேயே நீண்ட நேரம் பஞ்சாயத்துகள் நடந்தன.
சம்பவம் குறித்து புல்பூர் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதே நேரத்தில், மணமகளின் குடும்பத்தினர் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டு, அவருக்கு உணவு வழங்கி, இந்தூருக்கு மீண்டும் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும் விவாதமாகவும் சமூக ஊடகங்களில் வைரலாகவும் மாறியது.மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.