பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2025-26 ஆண்டுகளுக்கான மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல தகவலை கூறியுள்ளார். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 200 புதிய வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் கூறியுள்ளார்.

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் செல்வதற்கு மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். அதிலும் மெட்ரோ ரயில்கள் மக்களின் விருப்பு தேர்வாக உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் இன்னும் கூடுதல் ரயில்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் கூறியது வரவேற்பை பெற்றுள்ளது.