
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் விலக்கு அளித்து போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஐந்து முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்க வேண்டும். குழந்தைகளின் வயது குறித்து நடத்துனர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் தக்க பிறந்த சான்றிதழ் அல்லது ஆதார் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். பயணிகளிடம் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.