
பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பூமி அழியப்போகிறது என அவர்கள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். அதாவது பூமியில் மனிதர்கள், விலங்குகள் உட்பட எந்த உயிரினங்களும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பேரழிவு ஏற்படும் என கூறியுள்ளனர். இந்த அழிவு இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட உள்ளது. இவர்களின் கருத்துபடி மனிதர்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டு பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்சியசை அடையும். அந்த வெப்பத்தில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது.
எனவே அனைத்தும் வெப்பத்தின் காரணமாக மொத்தமாக அழிந்து விடும். இதேபோன்று 66 மில்லியன் வருடங்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்றும் அதனால் தான் டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் பூமி முதலில் சூடாகி, பின்னர் வறண்டதாக மாறி வாழ தகுதியற்றதாக மாறும். அதோடு வெப்பத்தின் காரணமாக எரிமலைகள் வெடித்து பூமியின் பெரும் பகுதி எரிமலைகளால் நிரம்பும். அப்படி நிகழும் போது கார்பன் டை ஆக்சைடு அதிகமாக வெளியேறி மக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு உயிரிழப்பார்கள். அதன் பிறகு படிப்படியாக ஒரு உயிரினம் கூட வாழ முடியாமல் மொத்தமாக பூமி அழிந்து விடும் என எச்சரித்துள்ளனர். மேலும் பூமி அழிந்த பிறகு அனைத்து கண்டங்களும் சேர்ந்து ஒரு சூப்பர் கண்டத்தை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.