
ஹரியானா மாநில குருகிராமில் வேகமாக வந்த கார் மோதி 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது நண்பர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் டெல்லி–ஜெய்ப்பூர் விரைவுச்சாலையின் சர்வீஸ் பாதையில் இந்த விபத்து நடந்தது.
உயிரிழந்த ஹர்ஷ் சிங்கால் என்ற இளைஞர், ஓம் விஹார் பகுதியில் வசித்து வரும் இரண்டாம் ஆண்டு எல்.எல்.பி மாணவர் ஆவார். அவரது நண்பர் அபிஷேக் குமார் என்பவர் பல எலும்பு முறிவுகளுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Haryana —
In Gurugram, a speeding Skoda car fatally struck Harsh Singhal, an LLB student. Singhal had gone to a roadside eatery with a friend and, finding the establishment crowded, was standing and talking on the road outside when the collision occurred. His friend sustained… pic.twitter.com/nHdJHrBKFq— Deadly Kalesh (@Deadlykalesh) June 25, 2025
விபத்து நேரத்தில், இருவரும் சிற்றுண்டிக்காக ஹோட்டல் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஹிசார் மாவட்ட பதிவு எண் கொண்ட வெள்ளை நிற ஸ்கோடா ரேபிட் கார் வேகமாக வந்தது.
கார் முதலில் உலோக வேலியை மோதி, பின்னர் ஹர்ஷ் மீது மோதியது. அபிஷேக் சாலையின் மறுபுறம் தூக்கி வீசப்பட்டார். சம்பவம் முழுவதும் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த விபத்துக்குப் பிறகு ஒரு பொதுமகன் அந்த காரை பல கிலோமீட்டர்கள் துரத்தி, அதன் பதிவு எண்ணை தெளிவாகக் காட்டும் வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஹர்ஷின் தந்தை அளித்த புகாரின் பேரில், அலட்சியமாக வாகனம் ஓட்டி ஒருவர் உயிரிழக்கச் செய்ததாக இந்திய குற்றச்சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.