
சென்னை மாவட்டம் தாம்பரம் அருகே மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் கல்லூரி மாணவரான விஷ்வா(20) என்பவர் பயணித்துள்ளார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக விஷ்வா ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஷ்வாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விஷ்வா ஆர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் மீனம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். ரயிலில் சென்ற போது தவறி விழுந்து விஷ்வா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.