
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தந்தை கண்முன்னே 2 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே வசிக்கும் தம்பதிக்கும் 2 1/2 வயதில் தனவேந்தன் என்ற மகன் இருந்துள்ளார். அந்த நபர் தனது குழந்தை தனவேந்தனை மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கல்லூரி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த தனவேந்தன் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த உறவினர்கள் குழந்தையின் சடலத்தை அணைத்துக் கொண்டு கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.