
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை அருகே சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்தவர்கள் கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சரக்கு வாகனம் மீது மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜேக்கப் ஆபிரகாம்(60), அவரது மனைவி ஷீலா(55) , 2 வயது குழந்தை ஆரான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர்களது மருமகள் எலினா தாமசை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.