
பிரபல திரைப்பட நடிகர் மற்றும் மத்திய மந்திரி சுரேஷ் கோபி. கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், கேரளாவின் முதல் பாஜக எம் பி என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் கொல்லம் பகுதியில் அமைந்துள்ள சுரேஷ் கோபியின் பூர்வீக வீட்டில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய வீட்டில் இருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய மந்திரி வீட்டில் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.