ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் அகில இந்திய அளவில் பென்சாக் சிலாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக மாணவி சிவமித்ரா அமிர்தவல்லி பங்கேற்றார். மேலும் சிவமித்ரா இந்த போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் துபாயில் நடக்க இருக்கும் பென்சாக் சிலாட் உலகளாவிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக சிவமித்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.