உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் ராகப்கஞ்ச் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு காவலர் குடியிருப்பு அமைந்துள்ள நிலையில் கடந்த 3-ம் தேதி மாலை ‌ இங்கு பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் தங்கி இருந்த வீட்டிற்கு மற்றொரு காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆண் இன்ஸ்பெக்டர் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த நிலையில் இந்த விவகாரம் அவருடைய மனைவிக்கு தெரிய வந்தது. இதனால் அவர் தன்னுடைய சகோதரர், மைத்துனர் மற்றும் சில உறவினருடன் அங்கு சென்றுள்ளார்.

பின்னர் தன் கணவர் மற்றும் அவருடன் இருந்த பெண் ஆகியோரை வெளியே இழுத்து அடித்து தாக்கியுள்ளார்.‌ தன் கணவரின் ஆடையை அவர் கிழித்ததோடு கோபத்தில் அந்த பெண்ணையும் அடித்தார். இந்நிலையில் பெண் இன்ஸ்பெக்டர் அவரின் மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவரின் மனைவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு அந்தப் ‌ பெண் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.