மகராஷ்டிரா மாநில மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் தொழில் நிபுணராக இருக்கிறார். இந்த பெண்ணை சென்னையைச் சேர்ந்த ஒரு வாலிபர் வேலைக்காக தொடர்பு கொண்டுள்ளார். அந்த வாலிபர் இரவு நேரத்தில் வேலைக்காக தொடர்பு கொண்ட நிலையில் சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு அந்த வாலிபரின் தவறான நோக்கம் புரிந்தது.

அதற்கு ஏற்றது போன்று அந்த பெண்ணும் பேசிய நிலையில் சிறிது நேரத்தில் அவர் உங்களுடைய இருப்பை காட்டுங்கள் என கூறினார். அதோடு இடுப்பை காட்டினால் 5000 ரூபாய் பணம் தருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த வாலிபர் முதலில் வேலை தேடுவது போன்று பயோடேட்டாவை பகிரும் நிலையில் பின்னர் இப்படி சபலமாக பேசி பெண்களை வலையில் சிக்க வைக்க முயற்சி செய்கிறார். எனவே இது போன்ற நபர்களிடமிருந்து பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அந்த பெண் கூறியுள்ளார்.

இந்த உரையாடல்களை அந்த பெண் ஸ்கிரீன்ஷாட் வடிவில் பகிர்ந்த நிலையில் பின்னர் அந்த வாலிபர் மதுபோதையில் தான் இருந்ததாகவும் அவ்வாறு பேசியதற்காக தன்னை மன்னித்து விடும் படியும் கூறியுள்ளார். மேலும் இந்த ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றன.