
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகளிர் தினத்தையொட்டி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, பெண்களைப் போற்றுவோம், பெருமைமிக்க நாடாக மாற்றுவோம்.
பாலினச்சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளை பெற்றுத்தரவும் நாதக சமரசமின்றி சமர் செய்யும். ஒவ்வொரு நாளும் மகளிர் நாள் தான் என மனதில் கொள்வோம். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார்.