தமிழ்நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை பணம் வரவு வைக்கப்படுகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த நிலையில் அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கிறார்கள்.

இதன் மூலம் ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள் பயன்பெறும் நிலையில் கூடுதலாக மகளிர்கள் இணைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு விரைவில் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று நேற்று பட்ஜெட்டில் கூட அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படும் நிலையில் இன்று வங்கி கணக்கில் பணம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இன்று 15ஆம் தேதி என்பதால் மகளிர் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்கப்பட உள்ளது.