
சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜீவா(19) அடிக்கடி பைக் வாங்கி தருமாறு தனது தந்தையிடம் அடம்பிடித்துள்ளார். நேற்று முன்தினம் ஜீவா முருகன் வேலை செய்யும் இடத்திற்கு சென்று மிரட்ட நினைத்தார். இந்த நிலையில் ஜீவா தன் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார்.
அப்போது குளிர் காய மூட்டப்பட்டிருந்த தீ எதிர்பாராதவிதமாக ஜீவா மீது பட்டது. இதனால் ஜீவா மீது தீப்பிடித்து உடல் கருகி முருகன் கண்முன்னே அலறி துடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் தனது மகனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.