ஒரு சில கிராம மக்கள் மழை பெய்யவில்லை என்றால் தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதை நம்பிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் கம்போடியா, மியான்மர், வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பூனைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்றால் மழை பெய்யும் என நம்பிக்கை  வைத்துள்ளார்கள்.

“ஹே நியாங் மாவ்” என்ற பெயரில் நடத்தப்படும் இந்த ஊர்வலத்தில் கருப்பு பூனைகளானது மூங்கில் கூடைகளில் வைக்கப்பட்டு, கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் நிறுத்தப்பட்டு, பாரம்பரிய இசைகளை வாசிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்றால் மழை பெய்யும் என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.