உத்திர பிரதேசம் உட்பட நாட்டில் பாஜக ஆளும் வட மாநிலங்களில் சமீப காலமாக புல்டோசர் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதாவது குற்றம் புரிபவர்களாக சந்தேகப்படுபவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு அரசு இருக்கிறது. குறிப்பாக இஸ்லாமியர்களின் வீடுகள் தான் குறி வைத்த தாக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் சிறுபான்மையினர்கள், பட்டியல் இனத்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் புல்டோசர் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த நிலையில் அதனை மீறியும் புல்டோசர் கொண்டு வீடுகளை இடிக்கும் சம்பவங்கள் தொடர்கிறது.

இந்நிலையில் பிரயாக்ராஜ் பகுதியில் ஒரு பேராசிரியர் உட்பட மூன்று பேரின் வீடுகளை உத்திரப்பிரதேச அரசு இடித்துள்ளது. இதற்கு தற்போது உச்ச நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பேராசிரியர் அலி முகமது, வழக்கறிஞர் சுல்பிகர் ஹைதர் உட்பட மூன்று பேர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பாஜக அரசால் இடிக்கப்படும் வீடுகளை மீண்டும் நீங்களே கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கூறுவது தான் இதற்கு ஒரே தீர்வு என்று நீதிபதிகள் கூறினர். மேலும் இந்த வழக்கை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.