
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி செல்வதற்கு உதவும் விதமாக மாதம்தோறும் மகளிர் உரிமை துறை சார்பில் புதுமைப்பெண் என்ற நிதி உதவி திட்டத்தை செயல்படுத்தி வந்தார். இதன் அடிப்படையில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்த மாணவிகள் உயர் கல்விக்காக கல்லூரியில் சேர்ந்த பின் மாதம் தோறும் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் இந்த நிதி உதவி திட்டத்தை வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். இதனை செயல்படுத்தும் விதமாக கல்விக்காக கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்து அரசு உதவி பெறும் மாணவிகளுக்கும் வழங்க முதல்வர் அறிவித்துள்ளார். இதனை செயல்படுத்தும் விதமாக டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறாரார்.