
கர்நாடக மாநிலம் மங்களூரில் லட்சுமி தேவி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கணவர் இருக்கும் நிலையில் அவர் திருமண விழாவில் அலங்கார வேலைகள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர்களது சொந்த ஊர் பீகார். இவர்களுக்கு 10 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது.
இதில் குழந்தையின் தந்தைக்கு பீடி குடிக்கும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி பீடி குடித்துவிட்டு அப்படியே வீட்டில் போட்டு விடுவார். இந்நிலையில் சம்பவ நாளில் அவர் பீடியை புகைத்து விட்டு அதன் துண்டை வீட்டில் போட்ட நிலையில் குழந்தை அனீஸ் குமார் அதனை எடுத்து வாயில் வைத்து விழுங்கி விட்டது.
இதில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் மறுநாள் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இது தெடர்பாக குழந்தையின் தாய் தன்னுடைய கணவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.