கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆதித்யா நாயர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில் அவருடன் பிரேக்கப் ஆனது. இதனை ஆதித்யாவின் பாலோவர்ஸ் கிண்டல் செய்ததால் மிகுந்த மனவேதனையில் அவர் இருந்துள்ளார். இதனால் கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 17ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் பினாய் (21) என்ற வாலிபரை கைது செய்தனர். இவர் இன்ஸ்டாகிராம் கிரியேட்டராக இருக்கும் நிலையில் ஆதித்யாவும் வாலிபரும் instagram மூலமாக பழகி காதலித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதன்பிறகு உயிரிழந்த மாணவி ரீல்ஸ் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் நடந்து முடிந்த பொது தேர்தலில் 2 பாடங்களில் தோல்வியடைந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய காதலும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் வேதனை தாங்காமல் ஆதித்யா தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தாயார் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.