தெலுங்கு சினிமாவின் முன்னணி திரைப்பட இயக்குனராக இருப்பவர் எஸ்.எஸ் ராஜமௌலி. இவரது முதல் திரைப்படம் “ஸ்டுடென்ட் நம்பர் ‌1” இது பெரும் வெற்றி பெற்ற படமாகும். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றி படமாகவே மாறியுள்ளது. இவர் சிறுத்தை, நான் ஈ, மாவீரன், பாகுபலி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இவர் இயக்கிய பாகுபலி படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு நடிகர் சூர்யாவை அழைத்த போது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் சூர்யா ஒரு பேட்டியில் கூறியதாவது தான் நடிக்க மறுத்ததற்காக வருத்தப்படுகிறேன். ஒருவேளை ராஜமவுலி வருத்தப்பட்டு இருந்தால் அவருடைய அடுத்த படத்தில் தான் நடிக்க தயார் என நடிகர் சூர்யா கூறியுள்ளார். மேலும் பாகுபலி படமானது உலகம் முழுவதும் ஆயிரம் கோடி வரை வசூல் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.