
பிரபல ரவுடியான தீபக் ராஜா நெல்லையில் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவருடைய கொலைக்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த எக்ஸ் பதிவில், 2021 ஆம் வருடம் பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பலால் செய்யப்பட்ட முத்து மனோவின் நண்பரும், பட்டியலின தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த சகோதரர் தீபக் ராஜா படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அவலம்.
சக மனிதனை படுகொலை செய்யும் சாதி வெறி பிடித்த குற்றவாளிகளை உடனடியாக எஸ்சி, எஸ்டி சட்டத்தில் உடனடியாக கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.