
மாண்டியாவில் பிறந்த நடிகை பவித்ரா ஜெயராம் விபத்தில் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் கன்னடத்தின் ‘ரோபோ ஃபேமிலி’ தொடர் மூலம் தொலைக்காட்சியில் நுழைந்தார். அதனை தொடர்ந்து ஜோகாலி, நீலி, ராதாராமன் ஆகிய தொடர்களிலும் நடித்து பிரபலமானார். இவற்றில் தெலுங்கில் வெளியான திரிநயனி சீரியல் மூலம் அவர் புகழ் உச்சிக்கு சென்றார். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.