
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதேசியில் முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பதற்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டது. அப்போது பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் வாங்க சென்றபோது திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாடு மற்றும் சேலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
அதன் பிறகு 34 பேர் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். இந்நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது கீழே விழுந்தவர்கள் மீது அங்கிருந்தவர்கள் ஏறி நடந்ததால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரியவந்துள்ள நிலையில் இதற்கு திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வருத்தம் தெரிவித்ததோடு திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.