மத்திய பிரதேசத்தில் இருக்கும் அரசு பள்ளியில் சக்சேன என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். அவருக்கு 55 வயது ஆகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தலைமை ஆசிரியர் மதிய நேரம் கழிப்பறைக்கு சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற ஒரு மாணவன் தலைமை ஆசிரியரின் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றான்.

மேலும் தலைமை ஆசிரியரின் ஸ்கூட்டரிலேயே அந்த மாணவன் தப்பி சென்றுள்ளான். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற தலைமை ஆசிரியரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.