
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 9-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காஸாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், அந்நகரை விமானம் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
இதுவரை 2,600க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். டெய்ர் அல் பலாஹ் பகுதியில் உள்ள ஷுஹாதா அல் அக்ஸா மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் யாசர் அலி, இறந்தவர்களின் உடல்களைப் பாதுகாக்க மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகள் நிரம்பியுள்ளதால் ஐஸ்கிரீம் லாரிகளை பிணவறைகளாக மாற்றி வருவதாக கவலை தெரிவித்தனர்.