இந்தியாவில் பிஎப் ஊழியர்கள் பிஎஃப் பணத்தை முன்பணமாக எடுப்பதற்கு சலுகை இனி கிடையாது என்று இபிஎப்ஓ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக இந்த சலுகையை பயனர்களுக்கு இபிஎப்ஓ நிறுவனம் வழங்கியது.

ஆனால் இனிமேல் திருமணம், உயர்கல்வி, வீடு மற்றும் கட்டுமானம் போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே முன்பணம் பெற முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா இனி பெருந்தொற்றாக இல்லை என்பதால் பிஎப் பணத்திலிருந்து முன்பணமாக எடுக்கும் வசதி உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.