ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதுண்டு. இந்திய அரசால் வழங்கப்படும் இந்த விருதுகள் பத்மபூஷன், பத்மவிபூஷன், பத்மஸ்ரீ ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களையும் பொது சேவை செய்பவர்களையும் கௌரவிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசு 2025 ஆம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருதுகளை அறிவித்துள்ளது. அதன்படி ஆந்திரா சட்டமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான பாலைய்யா அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட இருக்கிறது.