![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/05/newproject-2024-05-04t165012-578-1714821637.jpg)
பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த ரேவண்ணா, தந்தை தேவகவுடா இல்லத்தில் பதுங்கி இருந்த போது சிறப்பு புலனாய்வு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு போலீசார் வர மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவர் அங்கு மறைந்திருந்த நிலையில், போலீசார் தேவகவுடா வீட்டை கண்காணித்து வந்துள்ளனர். ரேவண்ணாவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில நிமிடங்களில், வீட்டை சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர்.