
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கபட்டோரின் அடையாளங்களை வெளியிடக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை காவல்துறையினருக்கு அறிவுறுத்துமாறு தமிழ்நாடு டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கபட்டோரின் அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும். மீறினால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.