
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கட்சியிலிருந்து செல்லலாம் என்று சீமானே சிக்னல் கொடுத்து விட்டார். அப்படி காளியம்மாள் திமுகவிற்கு வந்தால் அவரை ஏற்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார். தமிழகத்திற்கு நியாயமாக கொடுக்க வேண்டிய கல்வித் தொகையை கூட மத்திய அரசு கொடுக்க மறுக்கின்றது.
இந்த ஆட்சி ஏற்பட்ட பின்னர் கஜானா காலியாக இருந்தாலும் மதி நுட்பத்துடன் ஆட்சியை இயக்கி வருகிறார். கடுமையான நிதி பற்றாக்குறை நிலவுகிறது. எத்தனை ஆயிரம் கோடி நிதியை நிறுத்தினாலும் எங்களுடைய பணி தொடரும். சிவி.சண்முகம் இரவு நேரங்களில் அளித்த பேட்டியில் எப்படி இருந்தார் என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். அவர் முன்பு கொடுத்த பேட்டியின் சாரம்சத்தை எடுத்து பார்த்தாலே அவருடைய நிலை என்ன என்பது புரியும். பாம்பின் கால் பாம்பு அறியும். இந்த ஆட்சியை பொருத்தவரையில் அறிவுரைகள் மற்றும் குறைகள் எதுவாக இருந்தாலும் அலசி ஆராயப்படும். எதுவாக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என சேகர் பாபு பேசியுள்ளார்.