மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயது மகள் உள்ளார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட ஒரு வாலிபர் விளையாடலாம் என கூறி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் வலுக்கட்டாயமாக அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என அந்த வாலிபர் மிரட்டியதாக தெரிகிறது. இதனையடுத்து வீட்டிற்கு வந்த தாயிடம் சிறுமி தனது அந்தரங்க பகுதியில் வலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் தனது மகளிடம் விசாரித்த போது உண்மை தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.