தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவில் பாஜக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெறவில்லை. இதனால் பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இனிமேல் வாழ்க்கையில் விமான நிலையங்களில் செய்தியாளர் சந்திப்பு கொடுக்க மாட்டேன் என்று அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து இன்று கோவை திரும்பிய அண்ணாமலை, பாத்ரூம் போகும்போது வெளியில் வரும்போது எல்லாம் பேட்டி கொடுக்க மாட்டேன். கோவை பாஜக கட்சி அலுவலகத்தில் மட்டும் செய்தியாளர்கள் சந்திப்பு இருக்கும் எனவும் இதை முறைப்படுத்த போகின்றோம் எனவும் கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த திடீர் முடிவு தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.