பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வன்னியர்களுக்கான 15 சதவீத இட ஒதுக்கீடை கொடுத்தால் திமுகவுக்கு ஆதரவு கொடுப்போம் என்று கூறியிருந்தார். அதோடு வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் துரைமுருகனுக்கு வேறு வழியில்லாமல் பொது செயலாளர் பதவி கொடுத்ததாகவும் அவருக்கு ஏன் துணை முதல் பதவியை திமுக வழங்கவில்லை எனவும் கூறியிருந்தார். இதற்கு தற்போது திமுக கட்சியின் அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது பாமக கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் கட்சிக்காக உழைத்த நிலையில் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு அன்புமணி ராமதாசுக்கு ஏன் தலைவர் பதவியை கொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதன் பிறகு ஜாதிவாதி கணக்கெடுப்பை நடத்த சொல்லும் அன்புமணி ராமதாஸ் மத்திய அரசிடம் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துமாறு கூற வேண்டியது தானே.? இட ஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பாஜக கூட்டணியில் இருந்து அன்புமணி ராமதாஸ் வெளியேறுவாரா.? மேலும் பொதுமக்கள் அன்புமணி ராமதாஸ் அணியை நம்பி ஏமாற மாட்டார்கள் என்பதை கடந்த தேர்தலில் அவர்களுக்கு கூறிவிட்டார்கள் என்று கூறினார்.