
நாம் தமிழர் கட்சியினர் அதிக தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இந்த நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு, நாகப்பட்டினம், திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய எட்டு மக்களவைத் தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். முன்னதாக பாஜகவை விட நாம் தமிழர் கட்சி கூடுதல் ஓட்டுகளை வாங்கி காட்டட்டும் என்று அண்ணாமலை சவால் விடுத்திருந்த நிலையில் தற்போது 40 தொகுதிகளில் எட்டு இடங்களில் நாம் தமிழர் கட்சி முன்னிலை வகித்து வருகின்றது.